Thursday, May 24, 2012

நெருப்பாய் இரு!

நெருப்பாய் இரு!

ஒரே ஒரு முறை
பிறந்த மனிதனே…

அறிவின் எல்லைகள்
விரிந்த புனிதனே…

பிறந்து வந்ததன்
அர்த்தம் தெரியுமா…

நெருப்பைப்போல் உன்னால்
வாழ முடியுமா…

நெருப்பு ஒன்றுதான்
தொட்டதை எல்லாம் நெருப்பாக்கும்…

இன்னும் புதிது புதியதாய் தேடியே
அதையும் வசமாக்கும்…

flame1
நெருப்பு என்றுமே
மேல்நோக்கித்தான் நடைபோடும்…

தன் பொறுப்பை உணர்ந்துதான்
அனலாய் நடனம் தினம் ஆடும்…
அணைத்தாலும் சோராது ஒருபோதும்…
சிறு காற்று பட்டாலும் உடல் சீறும்…
சுற்றுவட்டாரம் சூடாகும்…
எந்த திசையும் தாண்டியது விளையாடும்…

உனக்குள்ளே சுழலும் வெப்பம்
அது சொல்லும் வாழ்வின் அர்த்தம்…

உன்னை நீ உணர்ந்தால் நித்தம்
உனதாகும் உலகின் மொத்தம்…

நண்பா நண்பா
என்றும் நெருப்பாய் இரு…

எந்த வெற்றிக்குமே நீ
பொறுப்பாய் இரு…

நண்பா நண்பா
என்றும் தீயாய் இரு…

ஊர் போற்றும் என்றால்
அது நீயாய் இரு…

-பிரியன் கவிதைகள்

No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!