நம்பிக்கை விதை
மூட்டை கட்டிய இருட்டு
மூச்சின்றிக் கிடந்தேன்
உயிரை இறுக்கி நெருக்கும்
உறவினர்கள்
சுவாச இழுப்புக்குச் சிக்காமல்
கெட்டிப்பட்டுக் கிடந்தது காற்று
அத்தனை பேர் கழுத்துக்கும் ஒரே
சுருக்குக்கயிறு
கலங்கவில்லை நான்
எந்தப் பேய்மழைக்கும் உண்டு
ஒரு கடைசித்துளி
எந்த இரவுக்கும் உண்டு
ஒரு சூரிய முற்றுப்புள்ளி
எங்களுக்கும் விடிந்தது
ஒட்டுமொத்த சமூகத்தோடு
எனக்கும் விடுதலை
இருட்டே இயல்பானதால்
வெளிச்சம் கூசியது
கொஞ்ச நேரம்தான்
கால்புதையும் நிலத்தில்
விசிறியடித்து விதைத்தான் உழவன்
மீண்டும் இருட்டு
பெற்றது விடுதலையல்ல;
சிறைவிட்டுத் தப்பித்து
உயிரோடு சமாதி
அழவில்லை நான்
இது புதைப்பல்ல; விதைப்பு
சமாதி முட்டுவேனென்று
சபதித்தேன்
உயிர்ச் சக்தியெல்லாம்
ஓரிடம் குவித்து
முயற்சியூட்டி முளைதூக்கும்வேளையில்
எங்கிருந்து வந்ததோ
பெயர்தெரியா ஒரு பறவை
என்னைத்தோண்டி விழுங்கித்
தொலைதூரம் பறந்தது
தொடர்ந்தது என் வாழ்வு
தொடர் இருட்டில்
மரணம்போல் ஒன்றுவந்தும்
மரிக்காதிருந்தேன்
உயிரில் நம்பிக்கை
ஊற்றி வைத்தேன்
நம்பிக்கையில் உயிரை
ஊற வைத்தேன்
வீண்போகவில்லை;
எச்சத்தில் வெளிவந்தேன்
இப்போது நான் முளைத்திருப்பது
கோட்டையொன்றின் கொத்தளத்தில்
நீ சாகும் வேளையிலும்
நம்பிக்கை சாகாதே!
- வைரமுத்து
மூச்சின்றிக் கிடந்தேன்
உயிரை இறுக்கி நெருக்கும்
உறவினர்கள்
சுவாச இழுப்புக்குச் சிக்காமல்
கெட்டிப்பட்டுக் கிடந்தது காற்று
அத்தனை பேர் கழுத்துக்கும் ஒரே
சுருக்குக்கயிறு
கலங்கவில்லை நான்
எந்தப் பேய்மழைக்கும் உண்டு
ஒரு கடைசித்துளி
எந்த இரவுக்கும் உண்டு
ஒரு சூரிய முற்றுப்புள்ளி
எங்களுக்கும் விடிந்தது
ஒட்டுமொத்த சமூகத்தோடு
எனக்கும் விடுதலை
இருட்டே இயல்பானதால்
வெளிச்சம் கூசியது
கொஞ்ச நேரம்தான்
கால்புதையும் நிலத்தில்
விசிறியடித்து விதைத்தான் உழவன்
மீண்டும் இருட்டு
பெற்றது விடுதலையல்ல;
சிறைவிட்டுத் தப்பித்து
உயிரோடு சமாதி
அழவில்லை நான்
இது புதைப்பல்ல; விதைப்பு
சமாதி முட்டுவேனென்று
சபதித்தேன்
உயிர்ச் சக்தியெல்லாம்
ஓரிடம் குவித்து
முயற்சியூட்டி முளைதூக்கும்வேளையில்
எங்கிருந்து வந்ததோ
பெயர்தெரியா ஒரு பறவை
என்னைத்தோண்டி விழுங்கித்
தொலைதூரம் பறந்தது
தொடர்ந்தது என் வாழ்வு
தொடர் இருட்டில்
மரணம்போல் ஒன்றுவந்தும்
மரிக்காதிருந்தேன்
உயிரில் நம்பிக்கை
ஊற்றி வைத்தேன்
நம்பிக்கையில் உயிரை
ஊற வைத்தேன்
வீண்போகவில்லை;
எச்சத்தில் வெளிவந்தேன்
இப்போது நான் முளைத்திருப்பது
கோட்டையொன்றின் கொத்தளத்தில்
நீ சாகும் வேளையிலும்
நம்பிக்கை சாகாதே!
- வைரமுத்து
No comments:
Post a Comment