Sunday, April 21, 2013

எல்லை


எல்லை 
----------- 

பிரக்ஞைக்கு திரும்பியதும் 
உலகை பார்க்க, நுகர, 
உணர, கேட்க வேண்டி 
வாசலைக் கடக்கையில் 
போகாதே எனத் தடுக்கப்படுகிறாள் 

இந்தச் சுவர்களே உனது வெளி 
இந்த மேற்கூரை உனது வானம் 
இங்கே, சலனமற்ற மதிய வேளையில் 
இந்தத் தலையணைகள் 
இந்த வாசமிகு சோப் 
இந்த டால்கம் பவுடர் 
இந்த வெங்காயங்கள் 
இந்த ஜாடி, இந்த ஊசி 
மற்றும் இந்த நூல் 
மற்றும் பூ வேலைபாடுடை 
தலையணை உறைகள் 
இவைகள்தான் உனது வாழ்க்கை 

அடுத்தப் பக்கத்தில் 
புலப்படாமலிருக்கும் வாழ்க்கையை 
எங்ஙனம் பார்ப்பது? 
பின்கேட்டை திறந்து கொண்டு 
போகும் அவள் 
போகாதே என தடுக்கப் படுகிறாள். 

தோட்டத்து பூங்காவை கவனித்துக் கொள் 
இந்த கீரையை, இந்த கொடியை 
அடிக்கடி கவனித்துக் கொள் 
தவறாமல் இந்த மஞ்சள் ரோஜாவை 
கூம்பு ஜாடிகளில் இருக்கும் செவ்வந்தியை 
இந்த தூய்மையான பசுமை பரப்பை 
இந்த ரசம் சொட்டும் பழச்செடியை 
இந்த மணம் வீசும் மண்ணை 
இவையணைத்தும் தான் 
உனது உலக

No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!